அவரென்ன ராஜினாமா செய்வது? மக்கள் தான் அவரை வீட்டுக்கு அனுப்ப தயாராகிவிட்டார்களே! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடுத்த துரைமுருகன்!

Default Image

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துரைமுருகனுக்கு தொடர்புடைய இடங்களில் 12 கிலோ தங்கம் மற்றும் ரூ.13 கோடி கைப்பற்றப்பட்டதாக தெரிவித்திருந்தார். இவரது இந்த கருத்துக்கு துரைமுருகன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட துரைமுருகன், அந்த அறிக்கையில், எல்லாவற்றையும் அறிந்துகொள்ள வேண்டிய இடத்தில் அமர்த்திருக்கின்ற எடப்பாடி பழனிசாமி எதுவும் தெரியாத சராசரி மனிதனை போல நடந்து கொள்வது கேலிக்குரியதாகும் என தெரிவித்துள்ளார்.

மேலும், எங்களுக்கு சொந்தமான இடங்களில், 12 கிலோ தங்கம் மற்றும் ரூ.13 கோடி கைப்பற்றப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி நிரூபித்தால், நான் பதவியை ராஜினாமா செய்கிறேன். அப்படி நிரூபிக்காவிட்டால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவியை ராஜினாமா செய்ய தயாரா? என சவால் விடுத்துள்ளார்.

.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்