3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக முறையீடு

Default Image

அதிமுக கொறடா சபாநாயகரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகிய 3 எம்.எல். ஏக்களுக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

மேலும் சபாநாயகர் அனுப்பிய  நோட்டீசுக்கு 7 நாட்களில்  எம்.எல்.ஏ.க்கள் பதில் அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் 3 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் தனபால்  நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ள நிலையில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மனு கொடுக்கப்பட்டுள்ளதால் அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என திமுக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்து உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்