நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கருத்து!
நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நீர்நிலைகள் குறித்து நீதிபதிகள் கூறுகையில், நீர்நிலைகளை பாதுகாக்காவிட்டால் பாட்டில்களில்தான் எதிர்கால சந்ததியினர் நீரை பார்க்க நேரிடும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், இலவசங்களுக்கு நிதி ஒதுக்குவதற்கு பதில் வீணாகும் நீரை சேமிக்க அரசு அணைகளை கட்டலாம் என்றும், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளின் பரப்பளவை 6 மாதங்களில் அளவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.