கையில் ரூ. 38,750 மட்டுமே உள்ளது,சொந்தமாக காரோ, இரு சக்கர வாகனமோ இல்லை-வேட்பு மனுவில் பிரதமர் நரேந்திர மோடி தகவல்
பிரதமர் நரேந்திர மோடி தாக்கல் செய்த வேட்பு மனு பிரமாண பத்திரத்தில் கையில் ரூ. 38,750 மட்டுமே உள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்நிலையில் பாஜக சார்பில் மக்களவை தேர்தலில் உத்திர பிரதேசத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார்.இதனால் நேற்று பிரதமர் மோடியின் தலைமையில் பேரணிநடைபெற்றது.
இந்நிலையில் இன்று வாரணாசி மக்களவை தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தாக்கல் செய்த வேட்பு மனு பிரமாண பத்திரத்தில் கையில் ரூ. 38,750 மட்டுமே உள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல் கையிருப்பு ரூ. 38,750 மட்டுமே உள்ளது.சொந்தமாக காரோ, இரு சக்கர வாகனமோ இல்லை.அசையும் சொத்து – ரூ. 1.41 கோடி, அசையா சொத்து – ரூ. 1.10 கோடி என்று தாக்கல் செய்த வேட்பு மனு பிரமாண பத்திரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.