4 தொகுதி இடைத்தேர்தல்: அமமுகவுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு!மகிழ்ச்சியில் தொண்டர்கள்

4 சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் அமமுகவுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்து தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தொகுதி தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் பரிசுப்பெட்டி சின்னத்தை ஒதுக்கியது.

அதேபோல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை கட்சியாக பதிவு செய்தார்  தினகரன்.

Image result for பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு

நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த நான்கு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும்  என அறிவிக்கப்பட்டது.அதேபோல் அடுத்த மாதம் 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இதனால்  4 தொகுதி இடைத்தேர்தலுக்கு பரிசுப்பெட்டகம் சின்னம் கோரி டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில்  4 சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் அமமுகவுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்து தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் அமமுக தொண்டர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Leave a Comment