காஷ்மீரில் ஊடுருவிய தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை!

Default Image

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவிய தீவிரவாதிகளில் 2 பேரை சுட்டுக்கொன்ற எல்லைப் பாதுகாப்புப்படையினர், மற்றொருவனை வேட்டையாடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக எல்லை பாதுகாப்புப் படையினருக்குக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்பேரில் சத்ரிபோரா, வெஹில், நவ்கம், டங்கம் உள்பட பல்வேறு பகுதியில், நேற்று மாலை முதல் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பட்முரான் (Batmuran) பகுதியில் வீடு ஒன்றில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவன் வீட்டினுள் பதுங்கியவாறு, துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவனை வேட்டையாடும் பணியில் பாதுகாப்புப் படையினரும், போலீசாரும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்