இந்த பகுதியில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லையாம்!

மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து மக்களும் தங்களது வாக்குகளை மிகவும் உற்சாகமாக பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தேனீ மாவட்டம், போடி அருகே உள்ள மலை கிராமத்தில், அடிப்படை வசதிகள் மற்றும் சாலை வசதி கேட்டு, அக்கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அந்த பகுதியில் யாரும் வாக்களிக்கவில்லை.

இதனால் அங்குள்ள வாக்குச்சாவடியில் ஒரு வாக்குகள் கூட பதிவாகவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment