தோனி இல்லாத சென்னை… மாலுமி இல்லாத கப்பல் போல் தரை தட்டியது!

Default Image

தோனி இல்லாமல் இன்று விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் கடுமையாக சொதபிப்யுள்ளது. 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு வெறும் 132 ரன் மட்டுமே எடுத்து உள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா பேட்டிங் தேர்வு செய்தார்.

துவக்க வீரர் ஷேன் வாட்சன் மற்றும் டு ப்லெசி ஆகிய இருவரும் நன்றாக ஆடினார். வாட்சன்  29 பந்துகளில் 32 ரன்னும் 31 பந்துகளில் 45 ரன்னும் எடுத்தனர். அதற்கு பிறகு வந்த ரெய்னா 13 ரன்னும் ராயுடு 25 ரன்கள் மட்டுமே எடுத்தார். இறுதியாக வந்த ரவிந்திர ஜடேஜா 20 பந்துகளில் 10 ரன் மட்டுமே எடுத்தார். இதன் காரணமாக சென்னை அணி 20 ஓவர்களின் முடிவில் 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனைத் தொடர்ந்து எளிதான இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி துவக்கம் முதலே அதிரடியாக ஆடியது. அந்த அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர் சென்னை அணியின் பந்து வீச்சாளர்களை நொருக்கி தள்ளினார். அவர் 25 பந்துகளில் 50 ரன் விளாசினார். இதில் 10 பவுண்டரிகள் அடங்கும். மற்றொரு தொடக்க வீரரான ஜானி பேர்ஸ்டோ 44 பந்துகளில் 61 ரன் விளாச 16.5 ஓவர்களில் ஹைதராபாத் அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தோனி இல்லாத சென்னை அணி மாலுமி இல்லாத கப்பல் தடம் மாறி தரைதட்டி தோல்வியடைந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்