விஜய் சங்கரை வித்யாசமாக கலாய்த்த அம்பட்டி ராயுடு: அணியில் இடம் கிடைக்காததால் விரக்தி

உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பத்தி ராயுடுவிற்கு இடம் கொடுக்கப்படவில்லை. அவருக்கு பதிலாக விஜய் சங்கர் இடம்பெற்றார்.

இந்நிலையில் இது குறித்து ட்வீட் செய்துள்ள அம்பத்தி ராயுடு….

நான் உலக கோப்பை தொடரை 3டி கண்ணாடியை வைத்து பார்க்கப்போகிறேன். அதற்காக அந்த கண்ணாடியை ஆர்டர் செய்துள்ளேன் என்று டுவிட் செய்தார்.

இந்த தொடரை தேர்வு செய்தவுடன் விஜய் ஷங்கரை ஏன் தேர்வு செய்தோம் என தேர்வு குழு தலைவர் விளக்கம் அளித்தார்….

அம்பத்தி ராயுடுவிற்கு பதில் விஜய் சங்கர் ஆடினால் அவர் (3டி) 3 dimensional வீரராக இந்திய அணிக்கு கிடைப்பார். அதாவது பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் ஆகிய மூன்றையுமே செய்வார் என்று தேர்வு குழு தலைவர் கூறியிருந்தார். இந்நிலையில் 3d என பதிவிட்டு ட்வீட் செய்து விஜய் சங்கர் மற்றும் தேர்வுக் குழு தலைவரை விரக்தியில் கலாய்த்துள்ளார் அம்பட்டி ராயுடு.

 

author avatar
Srimahath

Leave a Comment