அமேதி மக்களவை தொகுதியில் போட்டியிட ஸ்மிரிதி இராணி வேட்புமனு தாக்கல்

Default Image

உத்தரபிரதேசம் அமேதி மக்களவை தொகுதியில் போட்டியிட மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி வேட்புமனு தாக்கல் செய்தார். 

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை  தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி, மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி, நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ஆம் தேதி,ஐந்தாம் கட்ட தேர்தல் மே 6-ஆம் தேதி,ஆறாம் கட்ட தேர்தல் மே 12-ஆம் தேதி,ஏழாம் கட்ட தேர்தல் மே 26-ஆம் தேதி நடைபெற உள்ளது.

முதற்கட்ட தேர்தல் நேற்று  நடைபெற்றது. இந்நிலையில் மக்களவை தேர்தலில்  போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பட்டியலை பாஜக வெளியிட்டது.அதேபோல் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில்  மக்களவை தேர்தலில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜகவின் ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.அவருடன்  சோனியா காந்தி, அவரது சகோதாரி பிரியங்கா காந்திமற்றும் பிரியங்காவின் கணவர் ராபட் வாதோரா சென்றனர்.

இந்நிலையில் உத்தரபிரதேசம் அமேதி மக்களவை தொகுதியில் போட்டியிட மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி வேட்புமனு தாக்கல் செய்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்