ஆரம்பத்தில் அடித்து, இடையில் சறுக்கி, கடைசியில் 152-ஐ சென்னைக்கு இலக்காக்கியது ராஜஸ்தான் அணி

Default Image

2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெறும் 25-வது ஐபில் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிவருகின்றது.இந்த போட்டி ஜெய்ப்பூரில்  நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி  பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதன் பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில்  7 விக்கெட்டை இழந்து 151 ரன்கள் அடித்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கிய கேப்டன் ரஹானே 14 ரன்னில் அவுட் ஆக, பட்லர் 10 பந்தில் 23 ரன்கள் அடித்து அவுட் ஆக, சஞ்சு சாம்சன் 6 ரன்னில் அவுட் ஆகினார். திருப்பாதி 10 ரன்னிலும், ஸ்மித் 15 ரன்னிலும் , ரியன் பராக் 16 ரன் அடித்து வெளியேறினார். ஸ்டோக்ஸ் 26 ரன் அடித்து அவுட் ஆக்கினார். கடைசியில் ஆர்ச்சர் 13 ரன்களுடனும், கோபால் 19 ரன்னுடனும் களத்தில் நின்றனர்.

இதன் பின்னர் 152 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்குகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்