தேர்தலை ரத்து என எதிர்கட்சிகள் சதி செயன்றனர் : தம்பிதுரை
ஆர்கே நகரில் இடைதேர்தல் களம் சூடுபிடித்து பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறது, ஒருபக்கம் ஸ்டாலின் 100 கோடி ரூபாய்வரை பணபட்டுவாடா நடக்கிறது என கூறுகிறார். மறுபுறம் பணபட்டுவாடா புகாரின் பெயரில் பலர் கைதாகி பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் போகிற போக்கை பார்த்தல் தேர்தல் மறுபடியும் ரத்தாகும் சூழல் உருவாகிவருகிறது. இதனை குறித்து, அதிமுகவை சேர்ந்த தம்பிதுரை தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ராவை சந்தித்தபின், ‘தோல்வி பயத்தின் காரணமாகவும், மக்களை திசை திருப்பவும் தேர்தல் ரத்தாகும் என போயான தகவல்களை எதிர்கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர்.’ என கூறியுள்ளார்.