நாட்டுப்படகு கடலில் மூழ்கி தூத்துக்குடி மீனவர் சாவு.

Default Image

தூத்துக்குடி; லூர்தம்மாள்புரத்தில் இருந்து கடந்த 12–ந்தேதி மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர். தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த சேசுராஜிக்கு சொந்தமான நாட்டுப்படகில் லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த கென்னடி வயது 43 பூபாலராயர்புரத்தைச் சேர்ந்த பிரதீப் 32 வயது,மற்றும்  சதன், வெனிலாஸ், லைஸ்டன் ஆகிய 5 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர்.

இவர்கள் கடலில் மீன்பிடித்து விட்டு, நேற்று முன்தினம் இரவில் நாட்டுப்படகில் கரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.  திடீரென்று படகில் ஓட்டை விழுந்தது.இதனால்  படகு முழுவதும் தண்ணீர் நிரம்பியதால், கடலில் மூழ்கியது. இதனால் கடலில் குதித்த 5 மீனவர்களும் தண்ணீரில் தத்தளித்தவாறு உயிருக்கு போராடினர். அப்போது அந்த வழியாக நாட்டுப்படகில் வந்த மீனவர்கள், கடலில் தத்தளித்த 5 மீனவர்களையும் மீட்கப்பட்டனர்  இதில் கென்னடி என்பவர்  அளவுக்கு அதிகமாக கடல்நீரை குடித்ததால், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தூத்துக்குடி கடலோர காவல்படையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்