தோல்விக்கு காரணம் இதுதான்: ஓப்பனாக கூறிய தல தோனி

Default Image
  • அதன் பின்னர் சில கேட்சுகள் விடப்பட்டது,  சில மிS-பீல்டிங் ஏற்பட்டது.
  • கடைசி சில ஓவர்களில் நாங்கள் சரியாக பந்து வீசவில்லை.

மும்பை  மற்றும் சென்னை இடையேயான ஐபிஎல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கியது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தீர்மானித்தது. இதன்படி முதல் ஆட்டத்தில் முதல் 18 ஓவர்கள் வரை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தது சென்னை அணி. ஆனால் கடைசி 2 ஓவர்களில் ருத்ரதாண்டவம் ஆடிய ஹர்திக் பாண்டியா 8 பந்துகளில் 25 ரன்கள் குவித்தார் .இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 170 ரன் விளாசிய.

கடின இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணியால் துவக்கம் முதலே சரியாக ஆட முடியவில்லை. சென்னை அணியின் துவக்க வீரர்கள் இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார். அதன் பின்னர் வந்த சுரேஷ் ரெய்னா 16 ரன்களிலும் தோனி 12 ரன்களிலும் வெளியேறினர்.

கேதர் ஜாதவ் மட்டும் நிலைத்து நின்று 54 பந்துகளில் 58 ரன்கள் அடித்தார். ஆனால் மும்பையின் ஹர்திக் பாண்டியா 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார் . பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் இரண்டிலும் ஒற்றை ஆளாக சென்னை அணியை வீழ்த்தினார் ஹர்திக் பாண்டியா. சென்னை அணி 20 ஓவர்களின் முடிவில் 133 ரன்கள் மட்டுமே எடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இந்த தோல்வி குறித்து பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி கூறியதாவது..

ஒரு சில காரணங்கள் எங்களுக்கு எதிராக சென்றுவிட்டது. முதல் 10 ஓவர்கள் ஆட்டத்தை கையில் வைத்திருந்தோம். அதன் பின்னர் சில கேட்சுகள் விடப்பட்டது,  சில மிச்-பீல்டிங் ஏற்பட்டது. கடைசி சில ஓவர்களில் நாங்கள் சரியாக பந்து வீசவில்லை. இதுவே எங்களுக்கு தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது. பல வீரர்கள் காயத்தில் உள்ளனர் என்று பேசினார் தோனி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்