ராகுல் காந்தி குழந்தை.. அவர் கேள்விக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது: மம்தா பானர்ஜி

Default Image
  • ராகுல் காந்தி இன்னும் சின்ன குழந்தை தான் அவர் கேட்கும் கேள்விக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியுள்ளார்

இந்தியாவிற்கான மக்களவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் விமர்சனங்கள் சமரசமின்றி வைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் மேற்கு வங்கத் தேர்தலில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரினாமுல், பாரதிய ஜனதா கட்சி என நான்கு கட்சிகளும் கூட்டணி இல்லாமல் தனித்தனியாக போட்டியிடுகிறது.

கடந்த வாரம் மேற்கு வங்கத்தில் பிரச்சாரம் செய்த காங்கிரஸின் தலைவர் ராகுல் காந்தி மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்தார். மேலும், பிரதமர் மோடியைப் போலவே தான் மம்தா பானர்ஜியும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் மம்தா பானர்ஜியிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டது… அது குறித்து பேசிய ராகுல் காந்தி சின்ன குழந்தை, அவர் நினைத்ததையெல்லாம் பேசிக்கொண்டிருப்பார். அவருக்கெல்லாம் பதில் சொல்லத் தேவையில்லை என்று கூறியுள்ளார் மம்தா பானர்ஜி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்