தேர்தல் பறக்கும் படையினர் காஞ்சிபுரத்தில் ரூ.3 கோடி பறிமுதல்.

Default Image
  • காஞ்சிப்புரம் அருகே உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3 கோடியை  பறக்கும் படையினர் பறிமுதல்.

வரும் ஏப்ரல் 18-ம்தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான சிறப்பு ஏற்பாடுகள் தமிழகமெங்கும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும், தங்களது தேர்தல் பணிகளில் முழுவீச்சுடன் களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் சில விதிமுறைகளை விதித்துள்ளது. உரிய ஆதாரம் இன்றி கொண்டு செல்லப்படும் படம் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவித்திருந்தனர். மேலும் சமூக வலைதள நிர்வாகிகளுக்கு தேர்தல் ஆணையம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்நிலையில், தேர்தலையொட்டி, தமிழகமெங்கும் பறக்கும் படையினர் வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர். காஞ்சிப்புரம் அருகே உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3 கோடியை  பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்