திமுக தேர்தல் அறிக்கை டிஷ்யூ பேப்பர் போன்றது : ஹெச்.ராஜா

Default Image
  • அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிவகங்கை அ.தி.மு.க மாவட்டக்கழக அலுவலகத்தில் நடைபெற்றது. 
  • தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை டிஸ்யூ பேப்பர் போன்றது என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். 

அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிவகங்கை அ.தி.மு.க மாவட்டக்கழக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக  மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் பேசும்போது, `பி.ஜே.பி தலைமையிலான அ.தி.மு.க கூட்டணி அமோக வெற்றிபெறும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், நான் எம்.பி-யாக இருக்கும்போது செய்ய முடியாத விடுபட்டுப்போன பணிகளை அண்ணன் ராஜா செய்வார் என்றும்,  அவருக்குத் துணையாக நானும் அமைச்சரும் இருப்போம்’ என்று உறுதியளித்துள்ளார்.

இதனையடுத்து ஹெச்.ராஜா அவர்கள் பேசுகையில், பா.ஜ.க, அ.தி.மு.க-வோடு அத்வானி காலத்திலிருந்தே நேச்சுரல் கூட்டணி வைத்திருக்கிறது என்றும், ஏதாவது, பிரச்னைகளுக்காக மட்டுமே அ.தி.மு.க-வை விமர்சனம் செய்திருக்கிறேன். தனிப்பட்ட முறையில் அ.தி.மு.க-வினர் யாரையும் நான் ஒருபோதும் விமர்சனம் செய்து பேசியது கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், நான் எம்.பி-யானவுடன் காவேரி குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கான முயற்சியை எடுப்பேன் என்றும், தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை டிஸ்யூ பேப்பர் போன்றது. பிரதமர் மோடி இந்தத் தேர்தல் மூலம் மீண்டும் பிரதமராவார் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்