ப்ரியங்கா காந்தி படகு மூலம் பிரச்சாரம்….!!!

Default Image
  • காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளரான பிரியங்கா காந்தி உத்திர பிரதேசத்தில் படகு மூலம் தனது பிரச்சாரத்தை துவங்கினார்.

மக்களவை தேர்தல் நெருங்கிவருகிறநிலையில், நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளரான பிரியங்கா காந்தி உத்திர பிரதேசம் மாநிலத்தின் கிழக்கு பகுதிக்கு கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பிரியங்கா காந்தி, கங்கை நதியில், 110 கி.மீ தொலைவுக்கு படகு மூலம் பிரச்சாரத்தை துவங்கியுள்ளார். இவர் பிரதேம் மாநிலத்தில் கங்கை நதிக்கரையில் வசிக்கும் மீனவ மக்கள், ஏழை மக்களை கவரும் வண்ணம் படகு பயணம் மூலம் பிரச்சாரத்தை துவங்கியுள்ளார்.

இதனையடுத்து, உத்தர பிரதேசத்தில், பிரியங்கா காந்தியின் இந்த பிரச்சாரம் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் வலிமையை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்