இந்தோனேசியாவில் வெள்ளத்தில் சிக்கி 43 பேர் பலி : 21பேர் படுகாயம் !!
- இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணம் பப்புவாவின் தலைநகரம் ஜெயபுரா அருகில் சென்டானியில் கனமழை பெய்தது.
- வெள்ளத்தில் 42 பேர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
- மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர்.கடந்த ஜனவரி மாதம் சுவாவேசித் தீவில் மழை மற்றும் நிலச்சரிவால் 70 பேர் உயிரிழந்தனர்.
இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணம் பப்புவாவின் தலைநகரம் ஜெயபுரா அருகில் சென்டானியில் கனமழை பெய்தது. இந்த கனமழையால் பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
இந்நிலையில் வெள்ளத்தில் 42 பேர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர். தற்போது மழை குறைந்துள்ளது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து பொது மக்களை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.
மேலும் பலர் வெள்ளத்தில் சிக்கியிருப்பதால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மீட்புப்பணி அதிகாரிகள் கூறியுள்ளனர்.கடந்த ஜனவரி மாதம் சுவாவேசித் தீவில் மழை மற்றும் நிலச்சரிவால் 70 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.