பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகளின் தண்டனைகள் கடுமையாக்க பட வேண்டும் !!!!நடிகர் ஆரி !!!!!!

Default Image
  • நடிகர் ஆரி ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார்.
  • இந்நிலையில் நடிகர் ஆரி பொள்ளாச்சியில்  பாலியல் சம்பவம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது  குறித்து நடிகர் ஆரி மிகவும் கோபத்துடன் பேசியுள்ளார்

நடிகர் ஆரி ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பல தமிழ்த்திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் இயக்குநர் சங்கரின் தயாரிப்பில் வெளியான “ரெட்டச்சுழி” படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து நெடுஞ்சாலை, மாயா திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

இந்நிலையில் நடிகர் ஆரி பொள்ளாச்சியில்  பாலியல் சம்பவம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது  குறித்து நடிகர் ஆரி மிகவும் கோபத்துடன் பேசியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், இந்த குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் இவர்களுக்கு ஜாமின் வழங்க கூடாது. மேலும் இந்த குற்றவாளிகளுக்கு ஜாமின் வழங்கினால் மேலும் பல பெண்களின் வாழ்க்கையை இவர்கள் சீரழித்து விடுவார்கள்.

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளின் வழக்கை CBIக்கு மாற்றியது ஆளும் கட்சியினரின் சூழ்ச்சியால் காலதாமதமாக்கி குற்றவாளிகளை தப்பிக்க வைப்பதற்கா ?எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும் இந்த வழக்கில் ஆளும்கட்சியினர் குற்றவாளிகளாக இருந்தாலும் அவர்களை தண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்