சாதி ஒழிப்பை பற்றி பேசும் படம் உறியடி2!!!!!!

Default Image
  •  இயக்குநர் விஜய்குமார் இயக்கத்தில் உருவான படம் “உறியடி 2”.
  • இந்நிலையில் தற்போது இந்த படம் குறித்து இயக்குநர் விஜய்குமார்இன்றைய காலக்கட்டத்தில் சமூகத்திற்கு சாதி பிரிவினைதான் மிகப்பெரிய பிரச்சனையாக காணப்படுகிறது. அந்த விஷயம் தான் நான் “உறியடி”, “உறியடி 2” படத்தை இயக்குவதற்கான காரணம் என்று கூறியுள்ளார்.

இயக்குநர் விஜய்குமார் இயக்கத்தில் உருவான படம் “உறியடி 2”. மேலும் இந்த படத்தில் நாயகனாகவும் நடித்துள்ளார். இந்த் படத்தை நடிகர் சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் வாயிலாக தயாரித்துள்ளார். இந்த் படத்திற்கு கோவிந்த் வஸந்தா இசை அமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்திற்கு பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் எடிட்டராக லின்னு பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் தற்போது இந்த படம் குறித்து இயக்குநர் விஜய்குமார் பேசுகையில்,  இன்றைய காலக்கட்டத்தில் சமூகத்திற்கு சாதி பிரிவினைதான் மிகப்பெரிய பிரச்சனையாக காணப்படுகிறது.

அந்த விஷயம் தான் நான் “உறியடி”, “உறியடி 2” படத்தை இயக்குவதற்கான காரணம். மேலும் அவர் பேசுகையில் ஒரு படைப்பாளிக்கான முழு சுதந்திரத்தையும் நடிகர் சூர்யா எனக்கு கொடுத்துள்ளார்.

இந்த  சமூகத்தில் தற்போது காணப்படும் சாதி அரசியலையும், சாதி ஒடுக்குமுறைகளையும் கேள்வி கேட்டு, அதற்கு சரியான தீர்வை சொல்லும் படமாக “உறியடி 2 ” உருவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்