திருச்செந்தூர் அருகே டிவி பார்த்துக் கொண்டிருந்த மூதாட்டியிடம்  வீடுபுகுந்து ரூ.1.40 லட்சம் நகை கொள்ளை!

Default Image

வீரபாண்டியன்பட்டணத்தில் டிவி பார்த்துக் கொண்டிருந்த மூதாட்டியிடம்  வீடுபுகுந்து ரூ.1.40  லட்சம் மதிப்புள்ள நகையை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டணம், மெடனா தெருவைச் சேர்ந்தவர் சேசைய்யா (80). இவரது மனைவி எல்ஜின் அகாட்டார் (76). இவர்களுக்கு 2மகன், 2மகள் உள்ளனர். இதில் இளைய மகன் விக்னேசியஸ்(40)காயல்பட்டினத்தில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். அவருடன் சேசைய்யா, எல்ஜின் அகாட்டார் ஆகியோர் வசித்து வருகின்றனர்.

இரவில் எல்ஜின் அகாட்டார் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். கணவர் வீட்டின் உள்ளே இருந்த நிலையில், டி-சர்ட், லுங்கி அணிந்த மர்ம நபர் வீட்டில் புகுந்து எல்ஜின் அகாட்டார் கழுத்தில் அணிந்திருந்த 7பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 40 ஆயிரமாகும். இதுகுறித்து திருச்செந்தூர் இன்ஸ்பெக்டர் ரகுராஜன், எஸ்ஐ ரசலையன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்