காஷ்மீருக்கு அமெரிக்கர்கள் யாரும் செல்ல வேண்டாம் டொனால்டு டிரம்ப்!!!

Default Image
  • இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுவதால் ஜம்மு காஷ்மீருக்கு அமெரிக்கர்கள் யாரும் செல்ல வேண்டாம்.
  • இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருந்து 10 கி.மீட்டர் தூரம் வரை அமெரிக்கர்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுவதால் ஜம்மு காஷ்மீருக்கு அமெரிக்கர்கள் யாரும் செல்ல வேண்டாம் என டொனால்டு டிரம்ப் நிர்வாகம் கூறி உள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருந்து 10 கி.மீட்டர் தூரம் வரை அமெரிக்கர்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுற்றுலா தளங்கள் , போக்குவரத்து நிலையங்கள் , வணிக வளாகங்கள் , அரசு கட்டிடங்கள் ஆகியவற்றை குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாகவும் அமெரிக்கா வெளியிட்டுள்ள பயண அறிவுறுத்தலில் கூறியுள்ளது.
புல்வமா தாக்குதலில் 40 பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு ஜெய்ஷ் இ முகம்மது இயக்கம் பொறுப்பேற்றது.
இதனை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே பெரும் பதற்றம் நிலவியது. தற்போது இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் ஓரளவு குறைந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்