பா.ஜ.க ஆர்சியில் எங்களுக்கு பாதுகாப்பு ஏது? OPSயை திருப்பி அடித்த தவ்ஹீத் ஜமாஅத்!

Default Image
  • கடந்த 5ஆம் தேதி சென்னை பொதுக்கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் சிறுபான்மையினர் பெரும் பாதுகாப்பில் உள்ளனர் என பேசிய துணை முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னையில் 06/03/2019 புதன் அன்று அதிமுக சார்பில் நடத்தப்பட்ட பாஜக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் பொதுக்கூட்டத்தில் மோடியின் முன்னிலையில் பேசிய தமிழகத்தின் துணை முதல்வர் திரு. ஓ.பன்னீர் செல்வம் அவர்கள்..,

பாஜகவுடன் கூட்டணி வைப்பது மத சார்பின்மைக்கு எதிரானது என்பது அரசியல் பச்சோந்திகளின் தவறான பிரச்சாரம் என்றும், கடந்த 5 ஆண்டுகளில் மோடி ஆட்சியில் இந்திய நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக எங்குமே சிறு அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கவில்லை என்றும் சிறுபான்மையினரை மோடியின் அரசு அந்த அளவிற்கு பாதுகாத்துள்ளது என்றும் பேசியுள்ளார்.

சிறுபான்மையினருக்கு எதிராக கடந்த 5 ஆண்டுகளில் படுபாதகம் செய்து வந்த மோடி அரசு சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு என்றும், கடந்த 5 ஆண்டுகளில் இஸ்லாமியர்களுக்கு எதிராக எந்த சிறு அசம்பாவிதங்களும் நடக்கவில்லை என்று சொல்லியிருக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் பேச்சுக்கு தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத்தின் கடும் கண்டனத்தை பதிவு செய்கின்றது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்