3வது ஒருநாள் போட்டி…! தோல்வியை நோக்கி இந்தியா! தன்னந்தனியாக போராடும் கேப்டன் விராட் கோலி!!

Default Image
  • இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
  • இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 313 ரன்கள் குவித்தது

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான ஒருநாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி அபாரமாக ஆடி 313 ரன்கள் குவித்தது .பின்னர் கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்

தவான் ஒரு ரன்னிலும், ரோகித் சர்மா 14 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் வந்த கேப்டன் விராட் கோலி நிதானமாக ஆடி அரைசதம் கண்டார். ஆனால் அடுத்து வந்த அம்பத்தி ராயுடு 2 ரன்னிலும் தோனி 26 ரன்னிலும்  தங்களது விக்கெட்டை இழந்தனர்.

தற்போது கேப்டன் விராட் 58 ரன்னுடனும் கேதர் ஜாதவ் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா 24 ஓவர்களுக்கு 118 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்