அசாமில் 55 வயதுடைய குடும்ப நண்பரால் கற்பழிக்கப்பட்ட 6 வயது சிறுமி….??

Default Image

அசாமின் ஜோர்கட் மாவட்டத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் கணவரின் உடல்நிலை சரியில்லாததால் சில மருந்துகளை வாங்குவதற்காக வீட்டிலிருந்து மருந்தகத்திற்கு சென்று மருந்து வாங்க வேண்டியதாக உள்ளதால்  55 வயதுடைய  நா-அலி போலியகாய்ன் புக்கிரி என்ற குடும்ப நண்பரிடம் தங்களது 6 வயதுடைய பெண் குழந்தையை விட்டு சென்றிருக்கிறார் அவரது பெற்றோர்கள்.குழந்தை என்று கூட பாராமல் அந்த பச்சிளம் பெண் பிள்ளையை கற்பழித்திருக்கிறார் அந்த முதியவர்.

பின்பு மருந்தகத்தில் மருந்து வாங்கிவிட்டு பெற்றோர்கள் வீடு திரும்பி வந்தபோது,அந்த ​​பெண் குழந்தை அழுகையுடன் அடிவயிற்றில் ஏற்பட்ட வலி குறித்து புகார் செய்தது.பின்பு குழந்தை கற்பழிக்கப்பட்டதை அறிந்ததையடுத்து போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.காவல்துறையின் விசாரணைக்கு பிறகு அவர்கள் குழந்தையை ஜோர்கட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து, பெற்றோரும் அவர்களது நண்பர்களும் அவரது வீட்டிலிருந்து குற்றஞ்சாட்டப்பட்டு அவரை பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைத்தனர். மருத்துவ பரிசோதனை போது கற்பழிப்பு செய்தது உறுதியானது.போலீசாரின் குற்றசாட்டு உறுதியான பின்பு அந்த முதியவர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்