நியூயார்க்கில் புல்வாமா தாக்குதலை கண்டித்து இந்திய வம்சாவளியினர் போராட்டம்!!!

  • இந்திய வம்சாவளியினர் நியூயார்க்கில் உள்ள ஐநா அவை தலைமை அலுவலகம் முன்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் கடந்த மாதம் 14 ஆம் தேதி ஜெய்ஷ்  இ முகம்மது இயக்க பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப் வீரர்கள்  40 பேர்  உயிரிழந்துள்ளனர்.புல்வாமா தாக்குதலை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் புல்வாமா தாக்குதலை கண்டித்து இந்திய வம்சாவளியினர் நியூயார்க்கில் உள்ள ஐநா அவை தலைமை அலுவலகம் முன்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய வம்சாவளியினர் ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தலைவர் மசூத் ஆசாருக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.என  கோரிக்கை வைத்துள்ளனர்.

author avatar
murugan

Leave a Comment