கரும்பு கட்டு 350 : இப்போதே சூடுபிடிக்க தொடங்கிய விற்பனை

Default Image

இந்த வருடம் செங்கரும்பு விளைச்சல் நன்றாக அமைந்ததால், வேலூரில் விற்பனைக்கு குவிந்துள்ளது. கடந்த ஆண்டை போலவே இந்த வருடமும் வேலூரில் பண்ருட்டி செங்கரும்பு ஒரு கட்டு ரூ.350 க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதேபோல் பண்டிகை காலத்தில் அந்தந்த பண்டிகை சீசனுக்கு ஏற்ற பொருட்கள் வெளியூர்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வேலூர் மார்கெட்டில் விற்பனை செய்யப்படும். இந்நிலையில் தற்போது செங்கரும்பு சீசன் களைகட்டியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் பயிரிடப்படும் கரும்பு வெல்லம் மற்றும் சர்க்கரை உற்பத்திக்கு செல்வதாலும், கடினத்தன்மை உடையதாலும் அந்த கரும்பு வெளியில் விற்பனைக்கு வருவதில்லை.

தற்போது வேலூருக்கு செங்கரும்பு அதிகமாக வர தொடங்கியுள்ளது. ஒருநாளுக்கு 5 லோடுகள் வரை  வேலூர் மார்கெட்டுக்கு வரவழைக்கப்படுகிறது. அடுத்தமாதம் பொங்கல் விழா  வரஉள்ள நிலையில் இப்போதே செங்கரும்பு விற்பனை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இதனையொட்டி வேலூர் மார்க்கெட்டிற்கு பண்ருட்டியில் இருந்து செங்கரும்பு நேற்று முன்தினம் வந்தது. இதில் 10 கரும்புகள் அடங்கிய ஒரு கட்டு ரூ.350 க்கு விற்பனை செய்யப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்