தொகுதி பங்கீட்டு குழுவினரை சந்தித்த ஸ்டாலின்….!!

  1. மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக + காங்கிரஸ் கூட்டணிக்கு  தொகுதி பங்கீடு முடிவாகியுள்ளது.
  2. தொகுதி பங்கீடு குழுவினரை சந்தித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மக்களவை தேர்தல் நெருங்கி வருகையில் மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜகவும் , காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.மாநிலத்துக்கு மாநிலம் மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்த வியூகங்களை வகுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் திமுக + காங்கிரஸ் கூட்டணிக்கு முடிவாகி தொகுதி பங்கீடு நடைபெற்றுள்ளது.இதில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும் , முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதியும் , கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் திமுக கட்சியின் தோழமை கட்சிகளாக இருக்கும் சிபிஎம் , சிபிஐ , விசிக,மதிமுக ஆகிய கட்சிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தோழமை கட்சிகள் முதல்கட்ட பேச்சுவார்த்தையை முடிந்த நிலையில் திமுக தலைவர் முக. ஸ்டாலின் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழுவினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment