நாளை மறுநாள் கடைசி டி20 போட்டி !!தொடரை சமன் செய்யுமா இந்தியா ?

Default Image
  • ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையேயான முதலாவது  டி20  போட்டியில்  ஆஸ்திரேலிய அணி  வெற்றி பெற்றது.  
  • நாளை மறுநாள் இரண்டாவது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெறுகிறது.

இந்தியாவில் நடைபெறும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டி-20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது  டி20 போட்டி நேற்று  நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பிஞ்ச் பந்துவீச்சை  தேர்வு செய்தார்.

இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி 126 ரன்கள் சேர்த்தது.அதிரடியாக ஆடிய ராகுல் 10 ஓவர்களின் முடிவில் 31 பந்துகளில் 47 ரன்கள் அடித்தார்.

 

இதன் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது.இதன் மூலம் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் நாளை மறுநாள் இரண்டாவது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெறுகிறது.இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில்  இந்திய அணி உள்ளது.இந்திய அணி தோல்வி அடையும் பட்சத்தில் சொந்த மண்ணில்  ஆஸ்திரேலியாவிடம் தொடரை இழக்க நேரிடும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்