” முக.ஸ்டாலின் நம்மை வழிநடத்துவார் ” வைகோ அதிரடி பேச்சு…!!
- கருணாநிதியின் மறைவை அனுசரிக்கும் வகையில் தமிழின் தொன்மையும் கலைஞரின் உரை என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது .
- நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஆற்றல் பெற்றவராக முக.ஸ்டாலின் இருந்து நம்மை வழிநடத்துவார் என்று வைகோ பேசினார்.
கருணாநிதியின் மறைவை அனுசரிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பல்வேறு திராவிட இயக்கங்கள் அனுசரித்து வருகின்றன. அந்த வகையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் கலைஞர் கருணாநிதியின் நினைவை போற்றும் வகையில் திருச்சியில் கருணாநிதியின் தமிழின் தொன்மையும் கலைஞரின் உரை என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது . இதில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஆற்றல் பெற்றவராக முக.ஸ்டாலின் இருந்து நம்மை வழிநடத்துவார்.நமக்கு தலைமை தாங்குவார். நம்முடைய தளபதி இந்த இயக்கத்தை தலைமை தாங்கி முன்னெடுத்துச் செல்வார் என்று வைகோ பேசினார்.