” மூளை இல்லாமல் பிறந்த சிறுவன் ” மருத்துவரின் தொடர் சிகிசையால் உயிர் வாழும் அதிசயம்…!!

Default Image
  • இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியான கம்ரியா_வில் மூளை இல்லாமலால் குழந்தை பிறந்துள்ளது.
  • தற்போது மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் மூளை வளர்ச்சியடைந்து ஆரோக்கியமுடன் இருந்து வருகின்றார்.
இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியான கம்ரியா_வை சேர்ந்த ரப் என்பவரின் மனைவி ஷெல்லி கடந்த 2013ஆம் ஆண்டில் கர்ப்பிணியாக இருந்த போது இவரின்  குழந்தையை மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்தனர்.அப்போது குழந்தை மூளை இல்லாமல் இருப்பதை பார்த்த மருத்துவர்கள் கருக்கலைப்பு செய்ய பரிந்துரைத்தனர். ஆனால் தம்பதி அதனை விரும்பவில்லை . அந்த குழந்தை பிறக்கும் போது மூளைப் பகுதியில் குறைவான சதவீதம் மட்டும் மூளை வளர்ச்சி என்பது தெரியவந்தது.
நோவா வெல் என்று பெயரிடப்பட்ட அந்த குழந்தை பார்வையின்றி பேசும் மற்றும் கேட்கும் திறன் இன்றி வளர்ந்தது. பின்னர் நோவாவை ஆஸ்திரேலிய மருத்துவர்கள் கண்காணிப்பில் பெற்றோர்கள் ஒப்படைத்தனர்.மூன்று வயதுக்கு பின்பு நோவாவுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு சிகிச்சையால் நோவாவின் மூளை வளர்ச்சி விகிதம் அதிகமானதை தொடர்ந்து சிறுவனுக்கு பார்வை திரும்பக் கிடைத்து பேசவும் எழுதவும் நோவாவுக்கு மருத்துவர்கள் பயிற்சி கொடுத்து வருகின்றனர். இதற்கு முன்பு மூளை வளர்ச்சி குன்றி பிறந்த குழந்தை உடனே இறந்து விடும் சூழலில் நோவா வெல் ஆரோக்கியாக வளர்ந்து வருகின்றான்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்