எந்த ஒரு ஆசிய அணியும் செய்யாத சாதனையை செய்த இலங்கை அணி!!தென் ஆப்பிரிக்காவுடனான தொடரை கைப்பற்றியது!!

Default Image
  • தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணி வென்று வரலாறு படைத்துள்ளது
  • எந்த ஒரு ஆசிய அணியும் தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது இல்லை

இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாடி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி கடுமையாக போராடி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பின்னர் இரண்டாவது போட்டி நடைபெற்றது .இதில் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி 222 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் ஆடிய இலங்கை அணி வெறும் 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன் பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 128 ரன்னிற்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தது.

இதன் காரணமாக 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி அற்புதமாக ஆடியது. முதல் இரண்டு விக்கெட்டுகள் எளிதாக விழுந்தாலும் அடுத்து வந்த குஷல்  மற்றும் பெர்னான்டோ ஆகியோர் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சை துவம்சம் செய்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வெற்றி பெற வைத்தனர். இதன் மூலமாக 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது.

மேலும்  தென்னாப்பிரிக்கா மண்னில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையைப் பெற்றது இலங்கை அணி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்