மார்ச் 1 முதல் காலவரம்பற்ற உண்ணாவிரதம்!! டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

Default Image
  • அந்தஸ்து கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்  உண்ணாவிரதத்தில் ஈடுபடப்போகிறார். 
  • மார்ச் 1 முதல் காலவரம்பற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடப்போகிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். 

பிப்ரவரி 11ம் தேதி முதல் புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று ஆளுநர் கிரண்பேடி உத்தரவின்பேரில் டி.ஜி.பி சுந்தரி நந்தா அறிவித்திருந்தார்.

ஆனால் ஹெல்மெட் தலைக்கவசம் அணிவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும், உடனே அபராதம் கூடாது என்று முதல்வர் நாராயணசாமி  தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பை ஆளுநர் ஏற்கவில்லை.  முதலமைச்சரின் விருப்பத்திற்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக கூறி அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி அதிருப்தியடைந்தார்.

இதனால் கருப்பு சட்டை அணிந்து ஆளுநர் மாளிகைக்கு எதிரே தர்ணாவில் ஈடுபட்டார்.தர்ணாவில் இருந்துகொண்டே  அரசுப் பணிகளை கவனிக்கிறார். புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி 6வது நாளாக தர்ணாவில் ஈடுபட்டிருந்தார்.

அதேபோல் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா சீட் பண்ட் நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு C.B.I விசாரணை_க்கு 3 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் C.B.I விசாரனைக்கு சென்ற போது அங்கே கொல்கத்தா காவல்துறை C.B.I அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Image result for mamtha banerjee DHARNA

பின்னர் கொல்கத்தா காவல் ஆணையர் வீட்டில் ஆலோசனை நடத்திய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.பின்னர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தர்ணாவை கைவிட்டார்.

Image result for CHANDRABABU NAIDU

மேலும் ஆந்திர மாநிலத்திற்கு தனிமாநில அந்தஸ்து வழங்கக்கோரி ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில்  டெல்லிக்கு மாநில அந்தஸ்து கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 1 முதல் காலவரம்பற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்