ரூ 6,000,00,00,00,000 டாலர் நிதி….பாகிஸ்தான்-சவுதி கைகோர்ப்பு…..!!
- பாகிஸ்தான் – சவுதி அரேபியா கைகோர்ப்பு
- பாகிஸ்தானுக்கு 6 லட்சம் கோடி டாலர் நிதி
ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 44 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த கொடூர தாக்குதலுக்கு உலக நாடுகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த கொடூர தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு ஆனது பொறுப்பேற்றுள்ளது.
இந்தநிலையில், பாகிஸ்தானின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் முயற்சியாக 6 லட்சம் கோடி டாலர் நிதியை சவுதி வழங்கியுள்ளது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு எந்த நிலையிலும் துணை நிற்போம் என சவுதி இளவரசர் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது