3 ஆண்டுகள் சிறை தண்டனை:முன்னாள் அமைச்சரின் தண்டனையை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
- பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
- உச்சநீதிமன்றம் மறுப்பு
உச்சநீதிமன்றம், பாலகிருஷ்ண ரெட்டி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.
தீ வைத்த வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை:
திமுக ஆட்சிக்காலத்தில் ஓசூர் அருகே நடைபெற்ற போராட்டத்தில் பேருந்துகள் மீது கல் வீசி , தீ வைத்த வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தனது விளையாட்டு துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
உச்சநீதிமன்றம் மறுப்பு :
இந்நிலையில் பாலகிருஷ்ண ரெட்டி தண்டனையை நிறுத்தி வைக்ககோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பாலகிருஷ்ண ரெட்டி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.4 வார காலத்திற்குள் தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.