மார்ச் 31ஆம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிப்பு : ஆதார், பான்
வங்கிகணக்குடன் ஆதார் நம்பர், பான் நம்பர் இவற்றை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என மத்திய அரசாங்கம் அறிவித்து இருந்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் ஆதார் எண், பான் நம்பர், இணைக்க மார்ச் 31ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதில் 139 சேவைகளை பெறுவதற்கு ஆதார் எண்ணை இணைக்க காலஅவகாசம் நீட்டிக்க முடிவு செய்து இருப்பதாகவும் முறைப்படி அறிவிப்பாணை வெளியிடப்படும் எனக்கூறியுள்ளது.