டெல்லியில் பயங்கர தீ விபத்து….250க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பல்…!!

Default Image

டெல்லி பாஸ்சிம்புரி என்ற பகுதியில் இருக்கும் குடிசைகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த தீ விபத்தால் குடிசைகள் கொளுந்துவிட்டு எரிந்தது.குடிசையில் எறிந்த தீ_யானது மளமளவென அருகில் இருந்த குடிசைகளுக்கும் பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் போக்கை மூட்டமாக இருந்தது.

இதுகுறித்து தகவலறிந்த உடனே சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர்  விரைந்து வந்தனர்.கொழுந்து விட்டு எறிந்த  தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர்.

இந்த கொடூர தீ விபத்தில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலாகியிருப்பதாக தீயணைப்புத்துறையினர் தகவல் தெரிவித்தனர்.இந்த தீ விபத்தில் அதிர்ஷ்ட வசமாக பாதிப்பு இல்லை.ஏற்கனவே  டெல்லியில் உள்ள ஹோட்டல் அர்பில் பேலஸில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் பலியான துயர சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்