தமிழக தலைவரை மதிக்கும் மோடி…தமிழிசை பெருமிதம்…!!

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.அதே போல திருப்பூரில் கலந்து கொண்ட பிரதமர் அங்கேயும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இந்த இரண்டு நிகழ்ச்சியும் அரசு நிகழ்ச்சியாகும்.இதில் அரசு அதிகாரிகள் , தமிழக முதல்வர் என பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் படாமல் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.அரசு விழாவில் தேசியகீதம் பாடததற்கு கண்டனம் என்று பலரும் கூறினர்.இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை , பிரதமர் மோடி பல மாநிலங்களில் தமிழை பற்றி எடுத்து பேசி உள்ளார் என்றும், திருக்குறளாக இருந்தாலும், தமிழக தலைவர்களாக இருந்தாலும் அதிக அளவில் மோடி மதிப்பளிப்பார் என்று கூறினார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment