அதிமுக+பிஜேபி யாருடன் இணைத்தாலும் தோல்வியடையும்…வைகோ கருத்து…!!

Default Image
  • அதிமுக+பாஜக+பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றார்கள்.
  • அதிமுக + பிஜேபி எத்தனை கட்சிகளை சேர்த்தாலும் தோல்வியாடையும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகையில் மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக_வும் , காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.மாநிலத்துக்கு மாநிலம் மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்த வியூகங்களை வகுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் திமுக + காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க அதிமுக தலைமையில் பாஜக + பாமக இணைந்து பாஜக_விற்கு 5 , பாமக_விற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து இறுதிபடுத்தபட்டுவிட்டது.

இந்நிலையில் இதுகுறித்து நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவிக்கையில், காவேரி ,  முல்லை பெரியாறு என அனைத்து விவகாரங்களிலும் தமிழகத்தை தொடர்ந்து பிஜேபி வஞ்சித்து வருகின்றது என்று தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் , பணபலம் அதிகார பலத்தை வைத்து வெற்றி பெற்றுவிடலாம் என்று அவர்களின் மனதில் ஒரு எண்ணம் இருக்கின்றது. நான்கரை ஆண்டுகாலத்தில் தமிழகத்திற்கு மட்டும் செய்த வஞ்சகத்தால் பிஜேபி கூட்டணியில் அதிமுக எத்தனை கட்சியை சேர்த்து பார்த்தாலும் தோற்பது உறுதி என்று அவர் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்