விஷத்தை எடுத்து குடித்தேன்…!பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன்..!

Default Image

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன். இவர் கபாலி, காலா மற்றும்  வடசென்னை, பைரவா,பரியேரும் பெருமாள் போன்ற படங்களுக்கு இசையமைத்து  உள்ளார்.இவர் அண்மையில் ஒரு பள்ளி விழாவுக்கு சென்றார். அங்கு உரையாடிய அவர் குழந்தைகளுக்கு தன் பள்ளி அனுபவத்தை கூறினார்.

அப்போது உடையாடிய அவர் நான் பள்ளியில் படிக்கும் நேரத்தில் பரிட்சை லீவு முடிந்து அசைன்மெண்ட் எழுதி வரச்சொன்னார்கள்.ஆனால் லீவ் முடிய ஒரு நாள் இருக்கும் போது என் ப்ரண்ட் அதை எழுதிட்டான். நான் எழுதல இதனால் பள்ளிக்கு போன எங்க டீச்சர் அடிப்பாங்கனு பயந்து வீட்டில்இருந்த  விஷத்தை எடுத்து குடிச்சிட்டேன்.

அப்படியே எங்க அம்மாகிட்ட போய் நான் சாகப்போறேனு சொன்னேன்.அதை அவங்க இன்னும் பெருசா எடுத்துக்கலை.அப்பறம் அப்படியே போய் அன்னைக்கு தூங்கி அடுத்தநாள் எந்திரிச்சிட்டேன். ஆனா நான் சாகல அப்புறம் பள்ளிக்கு போகும் போது டீச்சரும் அந்த அசைன்மெண்ட்டை கேக்கவே இல்ல.

நல்லவேளையா அந்த விஷத்துல என்ன கலப்படம் இருந்துச்சோ தெரியல நான் பிழைச்சிட்டேன்.இதுல ஒன்னுமே இல்லாத ஒரு விஷயத்துக்கு போய் இப்படி விஷம் குடிச்சதை நினைச்சு நான் பீல் பண்ணிருக்கேன்.இத பசங்க கூட சொல்லி சிரிச்சிருக்கேன்.எனவே குழந்தைங்க நீங்க இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் தவறான முடிவெடுக்காதீங்க.மேலும் உங்களுக்கு பிடிச்ச விஷயத்தை பாலோ பண்ணுங்க அது போதும் என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்