பிறந்த குழந்தையை தவறி கீழே விட்ட சம்பவம்……உறவினர்கள் போராட்டம்…!!

Default Image

கோவையை சேர்ந்தவர்கள்  பவித்ரா மற்றும் விக்ரம் தம்பதியர். இதில்  பவித்ரா_வுக்கு  கடந்த சனிக்கிழமை பிரசவவலி எடுத்து கோவை ஆவாரம்பாளையத்தில்  உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிரசவ வார்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு ஆண் குழந்தை பிறந்தது. நேற்று இரவு முதல் நல்ல உடல்நிலையில் இருந்த குழந்தை இன்று பிற்பகல் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.இதையடுத்து இறந்த குழந்தை பெற்றுக்கொண்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் குழந்தையை அடக்கம் செய்வதற்காக சென்றுள்ளனர்.

அடக்கம் செய்யும் இடத்தில் குழந்தையின் தலையில் இரத்த காயம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள்  உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது குழந்தை சாதாரணமாக உயிரிழந்ததாக கூறினர். பின்னர் உறவினர்கள் விசாரித்த போது குழந்தையை மருத்துவமனை ஊழியர்கள் கீழே போட்டதாக உறுதி செய்த உறவினர்கள் ஆத்திரமடைந்து மருத்துவமனை வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபடுவருபவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.பிறந்த குழந்தையை கீழே போட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்