ஆர்கே நகரில் அலைமோதிய வேட்பாளர்கள் : வேட்புமானுக்கள் குவிந்தன

Default Image

ஆர்கே நகர் இடைதேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனுத்தாக்கல் சென்னை தண்டையார்ப்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் கடந்த நவம்பர் மாதம் 27-ந் தேதி தொடங்கியது. தினமும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்புமனுத்தாக்கல் ஏற்றுக்கொள்ளபடும் என அறிவிக்கப்பட்டது.

ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் தொடங்கிய  தினத்தன்று சுயேச்சையாக போட்டியிட 4 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். அடுத்து 29-ந்தேதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலைக்கோட்டு தயம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

அடுத்ததாக 1-ந்தேதி அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன் உள்பட 13 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.

டிசம்பர் 2-ந்தேதி (மீலாது நபி) மற்றும் 3-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பொது விடுமுறை. இந்தநிலையில் வேட்புமனுத்தாக்கல் நேற்று (டிசம்பர் 4) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து வேட்புமனு தாக்கல் செய்ய சென்னை தண்டையார்ப்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் நேற்று காலை 9 மணி முதலே சுயேச்சைகள் குவிந்தனர். காலை 11 மணிக்கு வேட்புமனுத்தாக்கல் தொடங்கியவுடன் சுயேச்சைகள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் தங்களது வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர். நேரம் செல்ல, செல்ல கூட்டம் அலைமோதியதால் சுயேச்சைகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அதனடிப்படையில் வேட்புமனுத்தாக்கல் நடந்தது. மொத்தம் 110 டோக்கன்கள் வழங்கப்பட்டது.

வேட்புமனுத்தாக்கல் நேரம் மதியம் 3 மணி முடிந்த பின்னரும் சில சுயேச்சைகள் ஆர்வத்துடன் வந்திருந்தனர். ஆனால் போலீசார் அவர்களை அனுமதிக்கவில்லை. இதைனையடுத்து மதியம் 3 மணிக்கு மேல் வேட்புமனுத்தாக்கல் செய்ய வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

கடைசிநாள் பரபரப்பில்தான் தேசிய கட்சிகளான பா.ஜ.க. வேட்பாளர் கரு.நாகராஜன், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சத்தியமூர்த்தி, நடிகர் விஷால், எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா ஆகியோரும் மனுத்தாக்கல் செய்தனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்