தொடர்ந்து 6-வது நாளாக உண்ணாவிரதம் போராட்டம் நடத்தும் அன்னா ஹசாரே…!!

Default Image

லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா அமைப்புகளை அமைக்க வலியுறுத்தி, வரும் தொடர்ந்து 6_வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார் அன்னா ஹசாரே…

ஊழல்வாதிகளுக்கு எதிராக வலுவான லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி 2011ஆம் ஆண்டு அன்னா ஹசாரே நடத்திய உண்ணாவிரத போராட்டம் தேசிய அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த சட்டம் 2013ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. பிரதமர் மோடி பதவியேற்ற பிறகும் மாநிலங்கள் தோறும் ஊழலுக்கு எதிரான அமைப்புகள் ஏற்படுத்தப்படவில்லை. இதனிடையே இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடிக்கு 30க்கும் மேற்பட்ட முறை கடிதம் எழுதியிருப்பதாக தெரிவித்துள்ள அன்னா ஹசாரே, லோக்பால் மற்றும் லோக்ஆயுதா அமைப்புகளை அமைக்க வலியுறுத்தி வரும் ஜனவரி 30ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றார்.

மராட்டிய மாநிலம் ரலேகன் சித்தியில் நடைபெற்று வரும் இந்த காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றார்.இன்றோடு  தொடர்ந்து 6வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் அன்னா ஹசாரேவின் உடல் நிலை பாதிக்கப்பட்டு வருவதாக மறுத்துஇவர்கள் தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்