ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரும் வழக்கு:வழக்கை மீண்டும் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

Default Image

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரும் வழக்கில் விசாரணையை பிப்ரவரி 5-ஆம்  தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.இந்நிலையில் ஸ்டெர்லைட்  ஆலையை திறக்க அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனமும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

ஸ்டெர்லைட் வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.தொடர்ந்து  நடைபெற்ற விசாரணையின் போது, தமிழகத்தின் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் வாதிட்டார். ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்ட பிறகும் உரிய விதிகளை வேதாந்தா நிறுவனம் பின்பற்றவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் ஸ்டெர்லைட் வழக்கில் 3-ம் நாள் விசாரணை நிறைவு பெற்றுள்ளது.  அடுத்த விசாரணை வரும் 5-ம் தேதி தொடங்கும், அன்றைய தினம் இருதரப்பினரும் தங்களது வாதத்தை முடித்து கொள்ள வேண்டும் என்றும்  உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்