இந்திய அணிக்கு பதிலடி கொடுத்த நியூசிலாந்து!! 8 விக்கெட் வித்தியாசத்தில் கெத்தாக வெற்றிபெற்றது நியூசிலாந்து!!

Default Image

நியூசிலாந்து அணி  4 -வது ஒருநாள் போட்டியில் வெற்றி அடைந்தது.

இன்று 4 -வது ஒருநாள் போட்டியில் களமிறங்குகிறது. இன்று நடைபெறும் போட்டியானது ஹாமில்டன் நகரில் நடைபெற்று வருகிறது.

இன்று கோலிக்கு பதிலாக ரோகித் சர்மா கேப்டனா செயல்படுவார் என்று பிசிசிஐ அறிவித்தது .ஆகையால் இன்று இந்திய படைகளானது ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கியது.

இதில் ஹாமில்டன் டாஸ் வென்ற நியூ. அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதன் பின்னர் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி தொடர்ச்சியாக விக்கெட்டை பறிகொடுத்தது.கடைசியாக இந்திய அணி 30.5 ஒவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 92 ரன்கள் மட்டுமே அடித்தது.இந்திய அணியில் ஒரு வீரரும் கூட 20 ரன்களை தாண்ட வில்லை.

நியூசிலாந்து பந்துவீச்சில் டிரண்ட் போல்ட் 5 விக்கெட்டுகளையும், கிராண்ட் ஹோமே 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தினர்.

இதனையடுத்து 93 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.நியூசிலாந்து அணி 14.4 ஒவர்களில் 2 விக்கெட்டை இழந்து  வெற்றி இலக்கை அடைந்தது. இதன் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்தியா  முன்னிலையில் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்