இன்றைய போட்டியில் இளம் வீரருக்கு வாய்ப்பு!!!தல தோனி கையால் வாய்ப்பை பெற்ற இளம் வீரர்!!!
இன்றைய போட்டியில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாடுகிறது.
3 -வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3 போட்டி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் 4 -வது ஒருநாள் போட்டி இன்று ஹாமில்டன் நகரில் நடைபெறுகிறது.தொடர்ந்து ஓய்வு இல்லாமல் ஆடிவரும் விராட் கோலிக்கு கடைசி 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவார் என்றும் அறிவித்துள்ளது பிசிசிஐ.எனவே இன்றைய போட்டியில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாடுகிறது.
இதில் இளம்வீரர் ஷிப்மன் கில் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.முன்னணி வீரர் தோனி அவரை அறிமுகம் செய்து தொப்பி வழங்கிய புகைப்படத்தை பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ளது.