உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் வேலை வாய்ப்புகள் குவிந்துள்ளது : அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

Default Image

உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் வேலை வாய்ப்புகள் குவிந்துள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு மற்றும் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவை துவக்கி வைத்து பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பான திட்டங்களை கொண்டு வந்துள்ளதாக கூறினார்.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் பல்வேறு வேலை வாய்ப்புகள் குவிந்துள்ளதாக கூறிய அவர், பொது மக்கள் வாழ்வில் வளம் பெற வங்கி லோன் மேளாவை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்