தோப்பூரில் ரூ.1,264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை!!அடிக்கல் நாட்டினார்  பிரதமர் நரேந்திர மோடி!!!

Default Image

பிரதமர் நரேந்திர மோடி மதுரை தோப்பூரில் ரூ.1,264 கோடியில் 201.75 ஏக்கரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.

மதுரையில் உள்ள தோப்பூரில் சுமார் 1,264 கோடியில் அமைய இருக்கும்  எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். இதனால்  ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை  திட்டம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

இந்த திட்டத்திற்க்காக 1, 264 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.அமையவுள்ள எய்ம்ஸ் , மருத்துவமனையில் 750 படுக்கை வசதி , 100 மருத்துவ படிப்பிற்கான இடங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடி டெல்லியில் இருந்து இன்று காலை தனி விமானத்தில் மதுரை வந்தடைந்தார் .பின்னர் மதுரை தோப்பூரில் ரூ.1,264 கோடியில் 201.75 ஏக்கரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி.

இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்