பொறியியல் கல்லூரி அரியர் தேர்வு முறை மாற்றம்….அண்ணா பல்கலைக்கழகம் முடிவு…!!

Default Image

பொறியியல் படிப்புகளில் தற்போது இருக்கும் அரியர் தேர்வு முறையை மாற்றம் செய்ய பரிசீலித்து வருவதாக அண்ணா பல்கலைக்கழகம் நிர்வாகம்   தெரிவித்துள்ளது.

பொறியியல் கல்லூரிகளின் படிப்புகளில் அரியர் தேர்வுகளை ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே எழுதும் வகையில் இருந்து . மேலும் ஒரு பருவத்தில் 3 அரியர் பாடங்களை மட்டுமே எழுத முடியும் என்று அண்ணா பல்கலைகழகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பல்கலைக்கழக நிர்வாகம் தற்போது வெளியிட்ட அறிக்கையில் பொறியியல் படிப்புகளில் அரியர் தேர்வு முறையில் மாற்றங்கள் கொண்டு வருவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும், மாணவர்கள் தேர்வில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்